10/03/2022
பன்னீர் புஷ்பம்
பன்னீர் மரம் (Indian Lavender Tree) தாவரவியல் பெயர்: கெட்டார்டா ஸ்பீசியோசா (GUETTARDA SPECIOSA)) தாவரக்குடும்பம் பெயர்: ரூபியேசி RUBIACEAE பொதுப்பெயர்கள்: பீச் கார்டெனியா, சீப்ரா வுட், சீ ரேண்டியா, இண்டியன் லேவண்டர் ட்ரீ (BEACH GARDENIA, ZEBRA WOOD, SEA RANDIA, INDIAN LAVENDER TREE) தாயகம்: இந்தியா (India) இந்த மரம் பல நாடுகளில் வெப்பமண்டல கடலோர பகுதிகளில் பரவி உள்ளன. அவை கிழக்கு ஆப்பிரிக்கா, ஆசியா, சிங்கப்பூர் உட்பட ஆசியாவின் வெப்ப மண்டலப் பகுதிகள் பாலிநேசியா மற்றும் பசுபிக் தீவுகள்; இந்தியாவில் இந்த மரம் தெயவீக மரமாக கருதப்படுகிறது. பன்னீர் பூக்களுக்கு தேசிய மலராக அங்கீகாரம் தந்துள்ளது மார்ஷல் தீவுகள் என்னும் நாடு. பன்னீர் மரங்கள் 16 முதல் 30 மீட்டர் வரை உயரமாக வளரும். இதன் பூக்கள் ஆண்டு முழுவதும் பூக்கும்; மாலையில் மலர்ந்து அடுத்த நாள் காலையில் உதிர்ந்து போகும். 1. பன்னீர் மரத்தின் பலமொழிப் பெயர்கள்:
1.1. தமிழ்: பன்னீர் மரம், சிவகாய மரம், காசி பன்னீர் மரம், மயிலாம்பூ மரம், தெய்வப்பூ மரம் (PANNEER MARAM, SIVAKAYA MARAM, KASI PANNEER MARAM, MAYILAMPOO MARAM. DEIVAPOO MARAM)1.2. தெலுங்கு: பன்னீர்செட்டு, பன்னீர் புஷ்பா (PANNEER SETTU, PANNER PUSHPA)1.3. மலையாளம்: ரவா பூ (RAVAPOO) 1.4. சமஸ்கிருதம்: ஹின்மா (HINMA) 1.5. கன்னடம்: பிலிஹ_வினா லக்கி, பன்னீர்ஆலு ((BILI HOOVINA LAKI, PANNIR AALU) ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்கள் தலைவலி, கை கால்வலி, போன்றவற்றை குணப்படுத்த இதன் இலைகளைப் பயன்படுத்துகிறார்கள். பன்னீர் பூக்கள் மிகுந்த வாசனையுடன் இருக்கும். ‘குக்’ தீவுகளில் வசிக்கும் மக்கள் தலைக்குத் தேய்க்கும் எண்ணெயுடன் வாசனைக்காக இந்தப் பன்னீர் பூக்களைப் போட்டு வைத்துப் பின்னர்; பயன்படுத்துகிறார்கள். பாலுணர்வு தூண்டும் சக்தி கொண்டது இது. இதன் இலைகள் மற்றும் பூக்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள்; இதன் இலைகள் அல்லது பூக்களை தண்ணீரில் போட்டு ஊறவைத்து, வடிகட்டி பானமாக அருந்துகிறார்கள். பழங்குடி மக்களின் விருப்ப பானம் இது. இதன் இலைகள் அகலமானவை நமது வாழை இலை போல அதில் உணவு பரிமாறுகிறார்கள். யூஸ் அண்ட் த்ரோ தட்டுக்களாகவும் இதன் இலைகளைப் பயன்படுத்துகிறார்கள. குழந்தைகளின் துணிகளை சுத்தப்படுத்தவும், டாய்லெட் பேப்பர் போலவும் இதனைப் பயன்படுத்துகிறார்கள. தலைமுடிக்கு பயன்படுத்தும் கருப்பு நிற சாயமும் இந்த இலைகளில் இருந்து தயார் செய்கிறார்கள். இந்த மரங்களின் அடிமரக் கட்டைகள், பலகைகள், கம்புகள், வேர்க்கட்டைகள் அனைத்தையும் பலவித காரியங்களுக்காக பயன்படு