19/12/2024
காராம் பசு நெய்யின் பயன்கள் :-
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
குழந்தைகளுக்கும், கர்பிணிப் பெண்களுக்கும் மிகவும் இன்றியமையாத ஊட்டச்சத்துக்களையும், வைட்டமின் களையும் கொண்டது.
சித்த மருத்துவம், ஆயுர்வேதத்தில் அதிகம் பயன்படுகிறது.
ஆன்மீக வழிபாட்டிற்கும், யாக வேள்விகளுக்கும் ஆகச் சிறந்தது காராம் பசு நெய்.
காராம் பசு நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளுர்ச்சியை கொடுத்து உஷ்னத்தைத் தணிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒமெகா-3 நிறைந்தது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், தேக அரோக்கியதிற்க்கும் மிகவும் இன்றியமையாதது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நன்கு ஜீரண சக்தியை தூண்டும்.
கண் நரம்புகளை பலப்டுத்தி கண் பார்வை தெளிவடைய செய்யும்.
ஞாபக சக்தியை அதிகமாக தூண்டும்.
காராம் பசு நெய் மலச்சிக்கலைப் போக்கும், வாத, பித்த, கபத்தின் சீற்றங்களை குறைத்து அதனை தன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தை தவிர்க்கும்.
கருப்பையில் குழந்தையின் சரியான உடல் வளர்ச்சியையும் மூளை வளர்ச்சியையும் காராம் பசு நெய் உறுதிசெய்கிறது. இது வைட்டமின்கள் ஏ, டி, கே ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கும் உதவுகிறது.
சரும பளபளப்பைக் கொடுக்கும்.
உடலை வழுவாக வைத்துக் கொள்ள காராம் பசு நெய் உதவுகிறது.
சிலர் எப்பொழுதும் சோர்வுடன் உடல் வழுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால் கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால் அதிகமாக வலிப்பதாக கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சக்தியின்மையே. இவர்கள் தினமும் மதிய உணவில் காராம் பசு நெய் சேர்த்து வந்தால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் குணமாக காராம் பசு நெய்யை பயன்படுத்தலாம். குடற்புண் கொண்டவர்கள் பசியின்மையால் அவதியுருவார்கள். சரியான நேரத்திற்க்கு உணவு சாப்பிடாமலும் அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புற சுவர்களை புண்ணாக்கி விடுகின்றது. மேலும் வாயு கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்து கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி அவதியுருவார்கள்.
இவர்கள் உணவில் காராம் பசு நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலில் உட்புற சுவரில் உள்ள புண்கள் ஆறுவதுடன் சுரப்பிகள் பலப்படும்.
காராம் பசு நெய்யின் மருத்துவ குணங்கள்:-
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
"நெய்யில்லா உண்டி பாழ்" என்பது சித்தர்கள் கூற்று. 2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் காராம் பசு நெய்யின் பயன்பாடு அதிகம் இருந்து வந்துள்ளது.
மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை காராம் பசு நெய்யிக்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் காராம் பசு நெய்யை அதிகம் பயன்படுத்தினர் நம்முடைய முன்னோர்கள்.
மருந்துகள் கெடாமல் பாதுகாக்க காராம் பசு நெய்யே சிறந்த பொருளாகும்.
காராம் பசு நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தை கொடுக்கும் குணம் காராம் பசு நெய்யிக்கு மட்டுமே உண்டு.
ஜீரண சக்தியை தூண்ட காராம் பசு நெய் பயன்படுகிறது. காராம் பசு நெய் வயிற்றில் உள்ள அமிலத் தன்மையை சரி செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள Mucus Lining பகுதியை வலுவாக்குகிறது.
காராம் பசு நெய் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், தேக அரோக்கியதிற்க்கும் மிகவும் இன்றியமையாதது. இதில் Vitamin A, Vitamin E, Vitamin D, Vitamin K உள்ளது.
காராம் பசு நெய்யில் உப்பு, லாக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக்கொள்ளாதவர்கள் கூட காராம் பசு நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம்.
காராம் பசு நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, Cancer நோய்களை தடுக்கிறது. காராம் பசு நெய்யில் CLA என்ற ஆசிட் உள்ளது. இது உடல் பருமனாவத்தை தடுக்கிறது. இதுபோல் ஒமெகா-3 என்ற கொழுப்பு அமிலம் காராம் பசு நெய்யில் உள்ளது. இது மூலைக்கு சிறந்த Tannic ஆகும்.
காராம் பசு நெய்யில் Saturated fat 65% சதவிகிதமும், Mono un saturated fat 32% சதவிகிதமும், லினோலேட் un saturated fat 3% சதவிகிதமும் இருக்கிறது. இத்தகைய மருத்துவ குணம் வாய்ந்த காராம் பசு நெய் உடல் ஆரோக்கியத்திற்க்கு மிகவும் சிறந்தது.
காராம் பசு நெய்யை எவ்வாறு உணவில் பயன்படுத்துவது?
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
1. தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் காராம் பசு நெய்யை அப்படியே சாப்பிடலாம்.
2. காராம் பசு நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிடவேண்டும்.
3. தோசை வார்க்கும் பொழுது எண்ணைக்கு பதில் காராம் பசு நெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.
4. குழம்பு அல்லது சாம்பார் தாளிக்கும் போது எண்ணெய்க்கு பதில் காராம் பசு நெய்யை உபயோகிக்கலாம்.
5. இனிப்பு, காரம் போன்ற அணைத்து விதமான பலகாரங்கள் செய்யவும் காராம் பசு நெய்யை உபயோகிக்கலாம்.
6. வெண்பொங்கல் செய்யவும், சுவாமிக்கு நெய்வேத்யம் செய்து படைக்கவும் காராம் பசு நெய்யை முதன்மையாக பயன்படுத்தலாம்.
காராம் பசு நெய் கோவில்களிலும், யாக வேள்விகளிலும் ஏன் முதன்மையான பொருளாக பயன்படுத்த படுகிறது?
# # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # # #
1. சிவபெருமானுக்கு மிகவும் பிரியமான, பிடித்தமான பொருள் காராம் பசுவும் அதனுடைய பால் மற்றும் நெய்யும் ஆகும். காராம் பசு நெய்யில் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் நமது பாவங்கள் நீங்கி பல தலைமுறை புண்ணியங்கள் கிட்டும் என்பது ஐதீகம்.
2. ஆகம விதிகளின் படி கோவில்களில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யவும், நெய் தீபமேற்றவும் ஆகச் சிறந்தது காராம் பசு நெய்.
3. யாக வேள்விகளில் காராம் பசு நெய்யை பயன்படுத்தாத யாக வேள்விகள் முழுமை பெறாது என்பது ஆகம விதி.
4. நமது இல்லங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் தீபமேற்ற காராம் பசு நெய்யை பயன்படுத்தலாம். இது நமது இல்லங்களில் கெட்ட சக்திகளை போக்கி நேர்மறையான சக்திகளை இழுக்கும் தன்மை உடையது. இந்த காராம் பசு நெய் சிவபெருமானுக்கும், மஹா லக்ஷ்மிக்கும் மிகவும் பிடித்தமான பொருள்.
இவ்வளவு மருத்துவ குணங்களையும், தெய்வீக தன்மையையும் கொண்ட காராம் பசு நெய்யை நாமும் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பிப்போம். இழந்த உடல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்போம்.
குறிப்பு : தேவைப்படுபவர்களுக்கு தூய காராம் பசு நெய் கூரியர் சர்வீஸ் மூலம் தங்களது இல்லங்களுக்கே Door Delivery செய்து தரப்படும். மேலும் தகவல்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
எங்களது காராம் பசு கோசாலையில் இருந்து கீழ்காணும் பொருட்கள் அனைத்தும் கிடைக்கும்.
காராம் பசு நெய்,
காராம் பசு திருநீறு / விபூதி,
காராம் பசு பஞ்ச கவ்ய விளக்கு,
காராம் பசு பால்,
காராம் பசு வெண்ணை,
காராம் பசு பஞ்ச கவ்ய சாம்பிராணி கப்,
காராம் பசு பஞ்ச கவ்ய வரட்டி,
காராம் பசு சாண வரட்டி,
காராம் பசு கோமியம்
மற்றும்
காராம் பசு கன்று மாடுகள், சினை மாடுகள், கன்று குட்டிகள் கிடைக்கும்.
காராம் பசு கோ பூஜை செய்து தரப்படும். மேலும் தகவல்களுக்கு 8973355333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு: இந்த சேவையில் கிடைக்கும் தொகை அனைத்தும் காராம் பசுக்களை பராமரிப்பதற்க்கு பயன்படுத்தப்படுகின்றது.
வாழ்க வளமுடன். வாழ்க வையகம்..
- நன்றி.
#காராம்பசு #காராம்_பசு #காராம்பசுமாடு #காராம்_பசு_மாடு #காராம்_பசு_நெய் #காராம்பசுநெய் #பசு_நெய் #காராம்_பசு_திருநீறு #காராம்_பசு_விபூதி #காராம்பசுதிருநீறு #காராம்பசுவிபூதி #திருநீறு #விபூதி #நெய் #நாட்டு_மருந்து #சித்த_வைத்தியம் #ஜோதிடம் #நவக்கிரகம் #கோயில் #பூஜை #அபிஷேகம் #வழிபாடு #தமிழ் #தமிழ்நாடு #கலாசாரம் #பக்தி #முருகர் #திருப்பதி #காமதேனு #கோமாதா #கோசாலை #கோமியம் #சாணம் #திருச்செந்தூர் #நாட்டுமாட்டுநெய் #சுத்தமானநெய் #மாட்டுநெய் #ஆர்கானிக்நெய் #நாட்டுமருந்து #சித்தவைத்தியம் #சிவஅபிஷேகம் #கோதானம் #காராம்பசுமாடுவிற்பனைக்கு #பசு #பசுதானம் #இயற்க்கைமருத்துவம் #நாட்டுமாட்டுப்பால் #மாட்டுப்பால் ெய் ால் #காராம்பசுபால் #காராம்பசுத்தயிர் #காராம்பசுமோர் #காராம்பசுவெண்ணெய்