14/08/2021
இந்தியா என் தாய்நாடு,
இந்தியர்கள் அனைவரும் எனது சகோதர சகோதரிகள்.
நமது நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன்,
நமது நாட்டின் பழம்பெருமைக்காகவும், பண்முக மரபு சிறப்பிற்காகவும் நான் பெருமிதம் கொள்கிறேன்.
நமது நாட்டின் பெருமைக்கு தகுந்து விளங்கிட பெரிதும் பாடுபடுவேன்.
நமது பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை மதித்து நடந்துகொள்வேன்.
அனைவரிடமும் அன்பும் மரியாதையும் காட்டுவேன்.
நமது நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட பெரிதும் முனைந்து நிற்பேன்,
நமதுமக்கள் அனைவரும் நலமும் வளமும் பெருவதிலேதான் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.