Writer Charithraa's

Writer Charithraa's A Writer. An Architect. A Musicophile. Multitarian but a Lucubrate.!
(2)

உங்கள் மேலான அன்புடனும் ஆதரவுடனும், என்னடுத்த படைப்பாய் இதோ வந்துவிட்டாள் - ❤️புத்தகம் : மேதகுவின் மகள் - துவாரகா, பாகம்...
24/05/2026

உங்கள் மேலான அன்புடனும் ஆதரவுடனும்,
என்னடுத்த படைப்பாய் இதோ வந்துவிட்டாள் - ❤️

புத்தகம் :
மேதகுவின் மகள் - துவாரகா, பாகம் 01.
வெளியீடு:
Charithraa's Publications
பக்கங்கள்: 180
விலை: 250 + PC
Contact :
+91 74185 80369
+91 70928 84657

"In the Search of the Princess,
He found something undeniable.!"

இந்த Tagline, புத்தகத்துக்கான Cover Page டிஸைன் செய்து முடித்து அனுப்பும் கடைசி நொடிவரை தோன்றவேயில்லை.

முன் தினம் மாலை, அலுவலகம் விட்டுக் கிளம்பும் முன் Proof reading-ற்காக Office Printer-ல் கொடுத்த பிரிண்ட் ஸ்ட்ரக் ஆகி நின்றுவிட, ரெண்டு தட்டு தட்டியதில் "கொய்ங்க் கொய்ங்க்" என்று பல்லிளித்தது.

இரவுக்குள் நான் சரிபார்த்து Final பிரிண்ட்டிற்கு மறுநாள் அனுப்ப வேண்டும். இந்த நேரம் பார்த்து ப்ரிண்டர் மக்கர் செய்ய, Print Cancel செய்து அந்த பாடாவதி ப்ரிண்டரை நாலு எத்து விட்டுவிட்டு நகர்ந்துவிட்டேன்.

வீட்டுக்கு போகும் வழியில் உள்ளுக்குள் இரண்டாய்ப் பிரிந்து இருவேறு யோசனை.

"ஒருவேளை நாம வந்ததுக்கு அப்புறம் பிரிண்ட் வந்துருந்தா..?"

"சேச்சே...அதான் Print Cancel கொடுத்தாச்சுல்ல...! அப்புறம் என்ன...?"

"இல்ல..ஒருவேளை வந்து...நைட் ஷிஃப்ட் ஸ்டாஃப் ஆளுங்க யாராவது எடுத்துப்பார்த்து....."

"அச்சச்சோ....அது ரிஸ்க்காச்சே..??!"

ஏனெனில் நான் எழுதுவேன் என்பது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது. அது தெரிந்த ஒரே ஆள் (Scandal Queen கதையில் வரும் ஆர்த்தி) வைகா தான். ஒருவேளை எல்லோருக்கும் தெரிந்தால், அது நன்றாய் இராது. அந்தப்பார்வையிலேயே நான் பார்க்கப்படுவேன்.

"ஒருவேளை..பிரிண்ட் வந்து...."

சடெக்கென்று காரைத் திருப்பி அலுவலகம் வந்து பார்த்தால்,

"கொய்ங்க் கொய்ங்க்" மீண்டும் பல்லிளித்தது. Print Cancel-ஐ உறுதிப்படுத்திவிட்டு ப்ரிண்டரை இன்னும் நாலு எத்து நிம்மதியாக எத்திவிட்டு வீடு வந்தாயிற்று. Proof Reading, Final Correction என்று எதுவும் செய்ய இயலவில்லை.

மறுநாள் காலை.

அலுவலகம் நுழைந்ததும் வேகமாய்ச் சென்று பார்த்தால்,...

"கொய்ங்க் கொய்ங்க்"

"அப்பாடி..பிரிண்ட் எதுவும் வரல...!"

இருந்தாலும் பிரிண்டரைச் சுற்றிமுற்றி பார்வையை சுழலவிட,

"சாரே.... எந்தா தேடுது...?" - அலுவலக அட்மின் ராகுல். மலையாளி. பிரிண்டருக்கு பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பவன்.

"ஏ அதோன்னும்மில்லை...சும்மா இவிட நின்னேன் கேட்டியோ..?" கேவலமான மலையாளத்தில் பதில் பகன்று நிம்மதியோடு நகர்ந்தேன்.

பின் வழமையான அலுவல்கள், மீட்டிங்குகள்....

மதியம்போல், மீண்டும் ராகுல் வந்தான்.

"ஏட்டா...இன்னல ப்ரிண்ட் ஏதும் கொடுத்தோ..?"

ஜெர்க்கானேன்.

"இல்லியே.?"

"பின்ன ராவுல அங்ஞனே வந்து என்ன தேடுச்சு...?"

"இல்லல்ல..ச்சும்மா..."

"பின்ன கொழப்பமில்ல.....ஞான் அவிட ஒரு இருநூறு A4 பேப்பர் கண்டு....எல்லாமே தமிழ்..அதான் நிங்களிடத்தே வன்னு சோதிச்சு..!"

"அடப்பாவி...! இதத்தாண்டா நீ முன்னாடி சொல்லிருக்கணும்..!" என்று உள்ளுக்குள் ஜெர்க்காகி,

"ஆமா..வேற யார்கிட்டயாச்சும் சோதிச்சியா..?"

"ம்ம்ம்ம்....."தலையை மேலே உயர்த்தி ரெண்டு நிமிடம் யோசித்தான்.

"சோதிச்சியான்னு தான்டா கேட்டேன்..அதுக்கு ஏன்டா என்னைய சோதிக்கிற..?" என்பது போல் நான் அவனையே பார்த்துக்கொண்டிருக்க,

"இல்லே....சோதிக்கணுமோ..?"

"யப்பாஹ்...நீ ஒன்னும் செய்ய வேணாம்...அந்த பேப்பர் கட்டை அப்படியே கொடு..போதும்.!"

"ஆஹ்..பின்னே.....ஈவ்னிங் தரட்டோ...?"

"ஏன்டா....?"

"இல்ல...80 பேஜஸ் கழின்னு..பேலன்ஸ் நூறு பேஜஸ் உண்டல்லோ..அதையும் படிச்சுட்டு....."

"அடேய் அது தமிழ்டா..! நீ மலையாளம்...உனக்கெப்படி புரியும்..?"

"என்னேட்டா...டெக்னாலஜி...கூகுள் ட்ரான்ஸ்லேட் செஞ்சு படிச்சன்..!"

"அடப்பாவி...ஒன்னு ஒன்னா ட்ரான்ஸ்லேட் பண்ணி...டைம் எடுத்துருக்குமே டா...?"

ஜென்டில்மேன் செந்தில் மாதிரி கையை காற்றில் அசைத்து, "ஹ..ஹ...!"வென்றான்.

"அப்ப நீ காலைல இருந்து எந்த வேலையும் பாக்கல..?"

மீண்டும், "ஹ..ஹ...!".

மாலை.

"ஏட்டா..."

நிமிர்ந்தேன்.

அவன் கையில், ஒரு ஸ்பைரல் புத்தகம்.

வெறும் பேப்பர் கட்டுகளாய் இருந்ததை, ஸ்பைரல் பைண்டிங் போட்டு எடுத்து வந்திருந்தான்.

கொடுத்தான்.

முகம் ஒருமாதிரியாய்.

"அரவிந்தேட்டா...இனி இதுல பணி உண்டோ....?"

"ஆமாமா..கொஞ்சம் செக் பண்ணனும்..!"

"ஞான் ஒன்னு பறையட்டோ..?"

"ம்ம்ம்..."

"டைகேர்ஸ் குறிச்சு எங்கட ஸ்டேட்ல ஒன்னும் அபிப்ராயம் இல்ல கேட்டியோ..பின்னே..ஈ ஸ்டோரில...நீங்கள் அழ வெச்சுட்டு உண்டு...எந்தா ஒரு டெடிகேஷன்...ஒரு எனர்ஜி...ஒரு ஃபயர்..."

எழுத்தைத்தான் பாராட்டுகிறான் என்று நினைத்து,

"எனக்கா..?"

"ப்ச்..டைகேர்ஸுக்கு பறஞ்சுது..!"

"ஓ..." அமைதியாய்.

"ஒரு ஸ்டோரி..கூடவே டைகேர்ஸ்...பின்னே இன்னொரு ஸ்டோரி...கூடவே டைகேர்ஸ்...பின்னேயும் இன்னொரு ஸ்டோரி...அங்கனயும் டைகேர்ஸ்...அடிபொலி போ..!"

"இப்பவும் டைகர்ஸ் தானே...?"

"ஆஹ்..நிங்கட ரைட்டிங்க பறஞ்சுது.!"

"ஒஓஓஓஓஓஓஓ..." முத்துவில் ரஜினி சொல்வாரே, அப்படியொரு ஆனந்த "ஓ".

"பின்னே....ஈ பொண்ணு சுஷாந்தினி..வாட் எ கேர்ள்....வாட் எ லவ்....வாட் அன் ஆல்ஃபா கேரக்டர்...."

"ஒஓஓஓஓஓஓஓ..." மீண்டுமொரு ஆனந்த "ஓ".

"பக்ஷே..ஆயாளு...."

"ஏயாளு...?"

"அதான்...அந்த ஆஷுபத்ரி குஞ்சன்..."

"எதே..?"

"பின்னே...? எந்தா ஆளு அவன்..? நோ சென்டிமென்ட்ஸ்..நோ கேரக்டர்..ஆ சுஷா கெடச்சும் வேண்டான்னு எந்தக்கு பறையுது..? பிராந்தன்... பட்டிமகன்..! ஞான் அவனே கண்டால் சவட்டி களையும்..!"

அவன் என்னைச் சொல்வது போலவே உள்ளுக்குள் சுட்டதால் எழுந்து தள்ளிக்கொண்டே போய் அவனிருக்கையில் அமர வைத்து,

"போதும்..!"

இது, போதும்.!

அதன்பிறகு நான் Final check, Proof check என்று எதுவுமே செய்யவில்லை.

அது அவசியமென்று தோன்றவுமில்லை.

ஆனால்,

"In the Search of the Princess,
He found something undeniable.!"

இந்த Tagline அவசியமென்று தோன்றியது.

கதைக்குள்ளே நாயகன் என்ன கண்டுபிடிக்கிறான் என்பது வேறு,
கதைக்கு வெளியே நான் கண்டுபிடித்தது,

துவாரகாவை எழுதுவதற்காக நிறைய வாசித்தது, நிறைய யோசித்தது எல்லாமே, மொழிமாற்றம் செய்யப்பட்டு வேற்று மொழியாரால் வாசித்தாலும் உணர்வுகளை கடத்த முடிகிறது என்றால்,

அது ஒரு மாபெரும் இனத்தின் எழுச்சிப் போராட்டத்தின் நிறைவேறா தாகம்...அந்த தாகத்தை தீர்க்கவொருத்தி வல்லமை பெற்றிருக்கிறாள்.

அவள்தான் "மேதகுவின் மகள்".❤️
-----------------------------------
குறிப்பு:
ஏற்கனவே நெடுந்தொடராய் வாசித்தவர் உணர்வர். அறிவர். அவர்தம் கடமை மேலும் பலபேர்க்கு இப்படைப்பை சேர்ப்பது மட்டுமே. பின்னும் புதிதாய், புத்தகமாய் வாசிக்க நினைப்போர்க்கு,

புத்தகம் : மேதகுவின் மகள் - துவாரகா, பாகம் 01.
வெளியீடு : Charithraa's Publications
பக்கங்கள் : 180
விலை : 250 + PC
Contact :
+91 74185 80369
+91 70928 84657
-----------------------------------
Writer Charithraa's

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

Qatar-ல் சென்ற வாரம் இங்கே நண்பர்களின் பிள்ளைகள் "Outing" என்று சொல்லிவிட்டு மதியம்போல் 2-3 மணிக்கு மெட்ரோ ட்ரெய்னில் கி...
24/05/2026

Qatar-ல் சென்ற வாரம் இங்கே நண்பர்களின் பிள்ளைகள் "Outing" என்று சொல்லிவிட்டு மதியம்போல் 2-3 மணிக்கு மெட்ரோ ட்ரெய்னில் கிளம்பிப்போனவர்கள், வீடு திரும்ப நள்ளிரவு ஒன்றானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம்,

1. அனைவர்க்கும் வயது 10 முதல் 16க்குள் தான்.
2. அனைவரும் ஒரே இடத்தில் ஏறவில்லை. ஆளுக்காள் ஒவ்வொரு ஸ்டேஷனில் ஏறி பின் ஒரு பொதுவிடத்தில் கூடினார்கள்.

"அவர்கள் என்ன சாப்பிட்டார்கள்...?" என்பதைத் தவிர அவர்களது உடல், உடைமை, பாதுகாப்பு போன்ற எந்தவொரு விஷயத்துக்கும் எந்தப்பெற்றோருக்கும் எந்தவித அச்சமும் இல்லை.

நள்ளிரவு 12.00 மேல் போன் பெற்றோருக்கு போன் செய்து, "வந்து கூட்டிட்டு போங்க.." என்றால், "ரொம்ப லேட் ஆகிடுச்சு, அப்டியே மெட்ரோலேயே நான் சொல்ற இடத்துக்கு வந்துடுங்க.." என்று சொல்லிவிட்டு பொறுமையாக காரெடுத்து கிளம்பிப்போய் கூட்டி வர முடிகிறது.

காரணம்,

இவ்வளவு தைரியத்தை பெற்றோருக்கு இந்த அரசாங்கம் கொடுத்திருக்கிறது என்பதை விடவும்.....பாலியல் ரீதியான தப்பு செய்ய நினைப்பவர்களுக்கு, "மவனே குழந்தைங்களையோ பொண்ணுங்களையோ ஏதாச்சும் பண்ணீங்க, அறுத்து தொங்க விட்ருவோம்..." என்ற பயத்தை அதிகமாக கொடுத்திருக்கிறது அரசு.

பெண்களே வந்து பேசினாலும், "சொல்லுங்க சிஸ்டர்..!" என்று பம்ம வேண்டியதுதான்.

"அறுத்து தொங்க விடுவதா? மரண தண்டனையா..? ஐயோ இந்தியா போன்ற பெரும் ஜனநாயக நாட்டில் இதெல்லாம் ஒத்து வராது" போன்ற பழைமை வாதம்தான் நம்மூரில் தப்பு செய்பவர்களுக்கான ஆதாரம். தவிர சட்டத்தின் ஓட்டைகள், பணம் அல்லது அரசியல் செல்வாக்கு இப்படி எல்லா கண்றாவி காரணிகளும் இருக்கின்றன.

இந்த நேரத்தில்தான், "இந்தியாவில் சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான் போன்ற சப்பைக்காரணங்களை ஒதுக்கிவிட்டு, தனியுரிமைக் கொள்கை/தனித்தேசிய கோட்பாடு அவசியம் என்பது புரிகிறது.

"என் எல்லைக்குள் வந்துட்டா எல்லாருமே பாதுகாப்பா இருக்கணும். என் எல்லைக்குள்ள தப்பு செய்யறவன் அடுத்த தப்பை செய்யறதுக்கு அவனோட ஆண்குறி மட்டுமில்ல அவனாலேயே எழுந்திருக்க முடியாதபடிக்கு அடிவிழும்....அந்த பயம் இருக்கணும்...!"

அப்புறம், ஒரு ஆறுதல் பதிவு போட்டுவிட்டு 10 லட்சம் கொடுத்தால், அந்தப்பிஞ்சின் ஆத்மாவும் இனி பாதிக்கப்படப்போகும் பிஞ்சுகளின் ஆத்மாவும் நிச்சயம் ஏற்றுக்கொள்ளாது என்பதால், இவ்விஷயத்தில் சர்வாதிகாரம் காட்டலாம். தப்பே இல்லை.

தெரிந்தோ தெரியாமலோ
"தெறி" ஹீரோவிடம்
அரசாங்கம் அகப்பட்டிருக்கிறது.
தெறியில் வருவது போல் தப்பு செய்தவனை
தெறிக்க விடாவிட்டாலும், எதுவும்
தெரியாதது போல் இருக்காதீர்,
மிஸ்டர் விஜய்.!
-----------------------
Writer Charithraa's

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

ஒரு அப்பாவிக்குழந்தை மதுவெறி பிடித்த காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறாள். "இது...
23/05/2026

ஒரு அப்பாவிக்குழந்தை மதுவெறி பிடித்த காமுகர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு இருக்கிறாள். "இதுவும் ஒரு நியூஸ்" என்று கடக்க முடியாத இந்த துயரத்தை வைத்து அரசியல் கட்சிகள் "பிண/எமோஷனல் அரசியல்" நிச்சயமாக செய்யும் என்பது நம் எல்லோர்க்கும் தெரியும். போலவே, செய்திக்கு கூட்டிக்கொடுக்கும் ஊடகங்களும்.

இரண்டு ஊடங்கங்கள்.
இரண்டு செய்திகள்.

இதில் (அரசியல் கலப்புள்ள) பிஞ்ச செருப்பு எது? (உண்மையை சொல்லும்) நல்ல செருப்பு எது?

அறிந்தவர்கள் கூறவும்.

எது எப்படியாகிலும், இந்த நேரத்தில் அந்தச்சிறுமியின் அநியாய மரணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைப்பவர்களை, அவர்கள் ஆளும்கட்சி எதிர்க்கட்சி அந்தக்கட்சி இந்தக்கட்சி என்று எந்தக்கட்சியாய் இருப்பினும்,

அந்த செருப்பாலேயே அடிக்க வேண்டும்.

மக்களுக்குத் தேவை பாதுகாப்பான சூழலும் வாழ்வும்தான். உங்கள் அரசியல் விளையாட்டுகள் அல்ல.

அதுவும் ஒரு பிஞ்சின் மரணத்தை வைத்து.
--------------------------
Writer Charithraa's

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

"காதலின் தீபம் ஒன்று...ஏற்றினானே என் நெஞ்சில்...""ஏற்றினாளேன்னு தானே டி வரும்...?" "ஏன்..ஆம்பளைங்க ஏத்த மாட்டாங்களா..?""...
23/05/2026

"காதலின் தீபம் ஒன்று...
ஏற்றினானே என் நெஞ்சில்..."

"ஏற்றினாளேன்னு தானே டி வரும்...?"

"ஏன்..ஆம்பளைங்க ஏத்த மாட்டாங்களா..?"

"ஏத்துவாங்க ஏத்துவாங்க...நல்லா ஏத்துவாங்க...!"

"இவ்ளோ அழுத்திச் சொல்றதப் பார்த்தா ஏதோ உள்குத்து இருக்க மாதிரி தெரியுதே...?"

"ஆமா..குத்து தான்..!"

"அடச்சே..!"

Jokes apart,

இந்த காதல் தீபம், Obsession, Possessiveness இதெல்லாம் பெண்கள் மட்டும்தான் ஏற்றுவார்கள் என்றில்லை. ஆண்களும் ஏற்றக்கூடும். பின் பெண்களுக்கு பசலை முதற்கொண்டு யாவும் வியாபிக்கும்.

"ஏன் அதுல என்ன தப்பு...?"

இல்லைதான். அகநானூறு சொல்கிறதே தலைவியின் பசலை நியாயமென்று. சிலப்பதிகாரம் சொல்கிறதே தலைவியின் Obsession தவறிலையென்று.

ஆனால் அப்பெண்,

தானொருவன் மனையாளாய் இருந்துகொண்டு பிறன்மேல் இதெல்லாம் கொண்டிருந்தால்? தீபமாய் கொழுந்து விட்டெறிந்தால்?

அந்த ஆண்மகன் என்ன செய்ய வேண்டும்?

திரித்து இன்னும் எரிய வைப்பதா?
திருத்தி அப்படியே அணைத்து விடுவதா?
----------------------
Writer Charithraa's
Follow me on Whatsapp :
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

அவர்கள் தயவில் நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது, அமைச்சர் இருக்கையை விடுங்கள், பிளாஸ்டிக் சேர் அல்லாத ஒழுங்கான இருக்கையாவ...
22/05/2026

அவர்கள் தயவில் நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது, அமைச்சர் இருக்கையை விடுங்கள், பிளாஸ்டிக் சேர் அல்லாத ஒழுங்கான இருக்கையாவது கொடுக்கப்பட்டதா? இல்லை கூடுதல் எம்.எல்.ஏ சீட்டுகளாவது கொடுக்கப்பட்டதா?

30 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் பதவியை முதன்முறையாக அவர்கள் எட்டிப்பிடிப்பதை கூட பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இவ்வளவு தரக்குறைவான விமர்சனம் தவறு. இதில் பேசுவது, சமூகநீதி.

அதிலும் யாரைவைத்து இவ்வளவு அநாகரீகமாக இந்த வார்த்தைகளை பேச வைக்கிறது திமுக?

"மனம் முடித்தவனை புறந்தள்ளி, புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவது...."

உவமைக்குச் சொன்னாலும்,
உண்மையில் யாரென்று உங்களுக்கே தெரியும்.
-------------------
Writer Charithraa's

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

அவர்கள் எக்காலத்துக்குள்ளும் வாழப் பழகிக்கொண்டனர். 90களின் யாழ்ப்பாணத்து தெருவோரக்கடைகளுள் ஒன்றிது. வாகனங்கள் Vegetable ...
21/05/2026

அவர்கள் எக்காலத்துக்குள்ளும் வாழப் பழகிக்கொண்டனர்.

90களின் யாழ்ப்பாணத்து தெருவோரக்கடைகளுள் ஒன்றிது.

வாகனங்கள் Vegetable Oil என்று சொல்லக்கூடிய தாவர எண்ணெய்யில் ஓடுகின்றன. காரணம், காரணம் பெட்ரோல் தட்டுப்பாடு. பாட்டிலில் இருப்பது சர்பத் அல்ல. அன்றைய அதன் விலை ஒரு பாட்டிலுக்கு 1000 ரூபாய். ஒரு பால் பவுடரின் விலை 600 ரூபாய். காரணம், தட்டுப்பாடு. ஒரு செட் தோசையும் கறியும் 300 ரூபாய். காரணம் தட்டுப்பாடு.

தமிழ்க் குடும்பங்கள் யாவும் விலையேற்றம், தட்டுப்பாடு, பொருளாதாரத் தனிமை, போர்ச் சூழல் என்று எல்லாவற்றாலும் அடிவாங்கிய காலம். இன்றைக்கு அங்கே இருக்கும் விலையற்றம் பெரும் மலைப்பை தரலாம். ஆனால் 30 ஆண்டுகளாக அத்தனை தடைகளையும், தட்டுப்பாடுகளையும், துப்பாக்கி குண்டு ரத்தக்கறையையும் மட்டுமே கண்டுகொண்டிருந்த ஒரு இனம், அத்தனையையும் தாண்டி நீடித்து நிலைபெற்று அங்கேயே இருந்துகொண்டு போரிட்ட காலகட்டம். அதற்குப் பின்னால், மூன்று மந்திர வார்த்தைகள் இருந்தது.

Resilience, Sacrifice, Determination.

அதெப்படி அவர்களால் சாதிக்க முடிந்தது?

அவர்களுக்குத் தேவையாய், ஒரு மூன்றெழுத்து இருந்தது-

ஈழம்.

அதற்குப்பின்னால், மூன்று மந்திர எழுத்துகள் இருந்தது-

மே.த.கு.

அவர், 87ல் தமிழகத்தின் உதவி நாடுகிறார். ஒரு தலைவருக்கு கடிதம் எழுதுகிறார்.

"அய்யா...கொஞ்சம் பொருளாதாரச் சிக்கல்கள் இருக்கிறது. எம்மினத்தை உங்கள் சகோதர இனமாக நினைத்து உதவி செய்யுங்கள். இயக்கம் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கும்."

நினைத்ததை விடவும் அதிகமாக பணம் கிடைக்கிறது.

அதற்குப்பின்னால், மூன்று மந்திர எழுத்துகள் இருந்தது-

எம்.ஜி.ஆர்.

மீண்டும் போராட்டம். மீண்டும் போர். மீண்டும் தடைகள்.

90களில் மீண்டும் தமிழகத்தின் உதவி நாடுகிறார். ஒரு தலைவருக்கு கடிதம் எழுதுகிறார்.

இம்முறை உதவி கிடைக்கவில்லை.

அதற்குப்பின்னால், மூன்று தந்திர எழுத்துகள் இருந்தது-

திமுக.

எஞ்சியிருப்பதை மட்டுமே வைத்து போராடுகின்றனர்.

கலைஞர் உதவி செய்யவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள முடியாது. அதற்குக் காரணம், ஒரு மூன்றெழுத்து-

(அரசியல்) சூழல்.

ஏனெனில் மத்தியில் காங்கிரஸோடு கூட்டணி.

மாநிலத்தில், ராஜா.
மத்தியில், மந்திரி.
ஈழம் என்று வாயெடுத்தால்,
பதவியை விட்டு எந்திரி.!
அதனாலேயே அமைதி காத்தார்,
கலைஞர் எனும் தந்திரி.!

அப்படியெல்லாம் தடவிக்கொடுத்து கொஞ்சிக்குலாவிய காங்கிரஸ், இன்று முதுகில் குத்திவிட்டு கூட்டணியை விட்டு ஓடிவிட்டனர் என்கிறார்கள்.

அதற்குப்பின்னால், மூன்று சந்தர்ப்பவாத எழுத்துகள் இருந்தது-

பதவி.

அறுபதாண்டு கழித்து அமைச்சரவையில் இடமென்றால்,
அவர்களுக்கும் ஆசையிராதா?

அதற்குப்பின்னால், மூன்று புதிய எழுத்துகள் இருந்தது-

த.வெ.க. (விஜய் - மூன்றெழுத்து தான்)

அவர்களுக்குத் தேவை, மூன்று அதிகார எழுத்துகள்-

ஆட்சி.!

ம்ஹ்ம்ம்ம்..அரசியலில் பாருங்கள். நல்லவர் கெட்டவர் நண்பர் பகைவர் எதுவுமே இல்லை. பதவிக்காக, சுகத்துக்காக வரலாறு மறைக்கப்படுகிறது. மறக்கப்படுகிறது. அழிக்கப்படுகிறது.

நாம் எதுவுமே யோசிக்காமல், நடப்பவற்றையெல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறோம். வேறொரு மூன்றெழுத்தில் மூழ்கிக்கொண்டே..

ரீல்ஸ்.

நம்மிடமும் ஓர் அசாத்தியமான மூன்றெழுத்து உண்டு, பயன்படுத்தத் தவறுகிறோம்.

அறிவு.

இதையெல்லாம் எழுதுவதாலும் பேசுவதாலும் நாமென்ன செய்துவிடப்போகிறோம்? என்று அலட்சியப்படுத்தும் எண்ணமிருப்பின் மூன்றெழுத்தில் இத்தோடு முடிக்கிறேன்-

போதும்.

ஏனெனில், நானோ நீங்களோ அவரோ இவரோ கொண்டு வருவதில்லை மாற்றம். அதைக்கொண்டு வரும் மூன்றெழுத்து,

காலம்.
-----------------------------
குறிப்பு:
அவர்கள் எக்காலத்துக்குள்ளும் வாழப் பழகியவர்கள்.
இவர்கள், எப்படியாவது வாழப் பழகுபவர்கள்.

நாம்?

மூன்றெழுத்தில் உங்களுக்குத் தோன்றும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம்.
----------------------------
Writer Charithraa's
Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

The Persuasion Paradox."எதுக்கு இந்த கண்றாவி கருப்புக்கயிறை கையிலும் ருத்ராட்சத்தை கழுத்திலும் கட்டிக்கிட்டு இருக்கீங்க....
20/05/2026

The Persuasion Paradox.

"எதுக்கு இந்த கண்றாவி கருப்புக்கயிறை கையிலும் ருத்ராட்சத்தை கழுத்திலும் கட்டிக்கிட்டு இருக்கீங்க..?" என்றென் மனைவி கேட்டபோது என்ன பதில் சொன்னேனென்பதை இறுதியில் பார்ப்போம்.

அதற்குமுன்,

Have you noticed that the most argumentative people rarely persuade anyone? The most persuasive people don't argue - they Observe, listen, and ask questions. In any Conversation, Persuasion is an art that required a paintbrush, not a sledgehammer.

"நீ தமிழ்ல எழுதுனாலே எதுவும் விளங்காது. இதுல இங்குலீஸு வேற...! என்று வம்புக்கு வந்தால், நீங்கள் சராசரி. "ஏதோ சொல்ல வருகிறான், ஆராய்வோம்." என்று நினைத்து அமைதி காத்தால், Persuasive.

வம்புக்கு வருவோரிடம் நேரெதிர் நின்று வம்பு செய்தால், நானும் சராசரி. அமைதி காப்போரிடம், "வேறேதும் விளக்கம் வேண்டுமா..?" என்று அன்பு செய்தால், நானும் Persuasive.

"அடேய்..போதும்டா...மேட்டருக்கு வா..!"

சரி, குழப்பாது கொண்டு போவோம்.

டிவி நியூஸ் சேனல்களில் நேரடி விவாதங்கள் பார்த்திருப்போம். நாலு அறிவுஜீவிகள் ஆளுக்கொரு பக்கம் உட்கார்ந்து, தான் சொல்வதுதான் சரி என்று மார்தட்டி, கத்தி, நரம்பு புடைக்க பொய் பேசி, மேலும் அந்த நெருப்பில் பட்டுசேலை கட்டிய தொகுப்பாளினியோ கோட் சூட் போட்ட கோபிநாத்தோ இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி...எரிச்சலின் உச்சியில் சேனல் மாற்றினால்,

காக்க காக்க காதல் காட்சியொன்றில், அமைதியாக நிற்கும் சூர்யாவிடம் காதலை சொல்லிக்கொண்டிருப்பார் ஜோ.

"உன்கூட இருக்கணும்...உன்கூட வாழணும்..உன் குழந்தைகளை சுமக்கணும்.அப்புறம் ஒரு நாள்..உன் மடியிலேயே செத்துரணும்..."

அமைதியாய் கேட்டுக்கொண்டிருப்பார் சூர்யா.

"எனக்குத் தெரியும்..நீங்க யோசிக்கிறீங்க..இவளுக்கு எப்படி லவ் வந்துச்சுன்னு.."

மீண்டும் அமைதியாய், "ம்ம்ம்..."

"இட்ஸ் அ கேர்ள் திங்...எஸ்.பி சார்..! உங்களுக்கு புரியாது..!"

ஒரு புன்னகை மட்டுமே பதில்.

Actually அது அவருக்கு புரிந்திருக்குமென்பதை அடுத்த காட்சியிலேயே விளக்கியிருப்பார்.

இது, பேசவிட்டு வேடிக்கை பார்ப்பது. ஆழமாய் உள்வாங்குவது. எதிர்த்துப்பேசாமல் ஆராய்வது. அந்த உரையாடலில், சூர்யா செய்வது, Paint Brushing. அதுதான் ரசிக்க வைக்கிறது.

மேலே டிவி சேனல் உரையாடலில் அந்த நான்கு பேர் செய்வது, Sledgehammering. சுத்தியலால் மண்டையை உடைப்பது மாதிரி. தலைவலிதான் மிச்சம்.

இப்போது, நீங்கள் எந்த ரகம்?

"நாலு பேர் பேசுற இடத்துல நா பேசுறதுதான் எடுபடனும்..!" ரகமா?

இல்லை,

"அமைதியாக பேசவிட்டு ஆராய்ந்து ரசித்து பின்னர் அவர்களையே திரும்ப ரசிக்க வைக்கும்படி பேசும் ரகமா?

அது யாரோடுஎன்பதையும் பொறுத்து இருப்பதால், Think Twice.

"போடா வெண்ண..! இதுலாம் ஒரு கேள்வின்னு கேக்க வந்துட்டான்..!" என்று கேட்பீரானால், கமெண்ட் செய்வீரானால் அதற்கும் அடியேன் அமைதியே காத்தால் அதுவே,

The Persuasion Paradox.❤️
-------------------------
குறிப்பு:
ஆங்ங்ங்ங்..அந்த முதல் வரியில் என் மனைவிக்கான பதிலை மறந்துவிட்டேன்.

"இல்ல...Artistically இந்தக் கயிறுகள், ருத்ராட்சம் எல்லாம் ஒரு அமைதிப்படுத்தலுக்கு, உள்வாங்குறதுக்கு, கிடார் வாசிக்கும்போது கூடவே Metronym ட்ராவல் பண்றதுக்கு, அப்புறம் பதிலே பேசாம இருக்கறதுக்கு...ஒரு சப்போர்ட்டா இருக்குமேன்னு....." என்று விளக்கமாய் எடுத்துச் சொல்ல நினைத்து,

Arguement செய்யாமல் கழற்றி விட்டேன்.

ஹிஹிஹி.😊
------------------------------
Writer Charithraa's

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

அடி புனை தொடுகழல், மை அணல் காளைக்கு என்தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே;அடு தோள் முயங்கல் அவை நாணுவலே;என் போல் பெரு ...
19/05/2026

அடி புனை தொடுகழல்,
மை அணல் காளைக்கு என்
தொடி கழித்திடுதல்
யான் யாய் அஞ்சுவலே;

அடு தோள் முயங்கல்
அவை நாணுவலே;

என் போல் பெரு
விதுப்புறுக என்றும்

ஒரு பாற் படாஅதாகி,
இரு பாற் பட்ட இம் மையல் ஊரே!

"இன்னாடா இது...? பழைய பாட்டா கீது...?" என்று சந்தேகப்படுவோர்க்கு Yes, இது பழைய பாட்டுதான். அதுவும் அரதப்பழையது.

பெருங்கோழிநாய்கன் மகள் நக்கண்ணையார் தேவி புறநானூற்றில் (திணை: கைக்கிளை; துறை:பழிச்சுதல்) பாடியது.

"அத்த எதுக்கு இங்க சொல்லிகினு இருக்க...?"

பாடலுக்கான விளக்கம் சொல்லிவிட்டு சொல்கிறேனே?

வேறொன்றுமில்லை.
வெகுகாலத்துக்கு முன், உறையூர் எனும் பெருவூர் சண்டையால் இரண்டுபட்டுக் கிடக்கிறது.

காரணம்,

உறையூர் மக்களில் ஒரு சாரார் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி தங்களை ஆளவேண்டும் என நினைக்கின்றனர்.

மற்றொரு சாரார், ஏற்கனவே ஆண்டுகொண்டிருந்த தித்தன் ஆட்சியை விரும்புகின்றனர்.

அதுதான் சண்டையே.

கிள்ளி, இளையவன். அழகானவன்.
காலடியில் வீரக்கழல் அணிந்துள்ளான்.
அவனுக்கு கருந்தாடி இப்போதுதான் அரும்புகிறது.

அவனைப்பார்த்ததும் பெண்கள் யாவும் மையல் கொள்கின்றனர். அவனை அடையும் ஆசையால் தலைவியின் வளையல் கழன்று நழுவுகிறது. இப்படிக் கழன்றோடுவதை அவள் தாய் பார்த்துவிடக் கூடாதே என்று அஞ்சுகிறாள் தலைவி.

"இப்படிக் கழலாமல் இருக்க நான் அவன் தோளைத் தழுவிவிடலாமே..." என்று ஏக்கப்பெருமூச்சும் விடுகிறாள். அவனைத் தழுவிடத் துடிக்கிறாள்.

ஆனால் ஊரவையில் அதனைச் செய்ய நாணம் தடுக்கிறது.

ஒரு பக்கம் அச்சமும் நாணமும், இன்னொரு பக்கம் ஏக்கப்பெருமூச்சுமாய், அவளது மனம் விதுப்புறுகிறது.

"விதுப்புறுதுன்னா..? தமிழ்ல சொல்லுங்க பாஸ் என்னன்னு..!"

அதாவது, இருபக்கமும் துடிதுடித்துத் தடுமாறுகிறது.

அப்போதவள் சொல்கிறாள், "என்னைப் போல இந்த ஊரும், (கிள்ளி ஆட்சியா, தித்தன் ஆட்சியா என்று) தடுமாறட்டும்.

இதிலோர் சிறப்புண்டு.

காதல் பாடல் போலத்தெரிந்தாலும், அரசியலில் ஆட்சித் தடுமாற்றம் பற்றிய செய்தி
இப்பாடலில் முதன்மையாக உள்ளமையால் அகநானூற்றில் இணைக்கப்படாமல்
புறநானூற்றில் இணைக்கப்பட்டுள்ளது.

"அப்போ...கி(ல்லி)ள்ளிதான் இப்போ இருக்கற முதல்வர், தித்தன் தான் முன்னாள் முதல்வர், அப்புறம் அந்த தலைவி யாருன்னா..ஹேய்..ஸ்மார்ட் பாய்..அவங்களத் தானே சொல்ல வர்ற..?" என்று VIP பட விவேக் மாதிரி குறும்புப்புன்னகை செய்தால்,

பதிலுக்கு அடியேன் ஆடுகளம் தனுஷ் மாதிரி, "கொன்டேபுடுவேன்.." என்று Fun செய்யக்கூடும்.

இங்கே சொல்ல வருகிற விஷயம் வேறு.

தடுமாற்றம்.

எதிரெதிர் துருவமாக நின்று அறுபதாண்டு காலமாக நம்மை ஆண்டுகொண்டிருந்த திராவிடக் கட்சிகளினால் ஏற்பட்ட இயல்பான Boredom, புதியமுகமாய் வந்த நடிகரின் Stardom, "ஒருதடவை மாத்தித்தான் பார்ப்போமே..?" என்ற எண்ணம், மாறிய தலைமுறையின் வேகமான முடிவெடுத்தல், அப்புறம் கூடவே சோஷியல் மீடியா இதெல்லாம் சேர்த்து ஒரு மாற்றுக்கட்சியை ஆட்சிக்கட்டிலில் உட்கார வைத்திருக்கிறது.

இது புதிதல்ல.

1967ற்கு முந்தைய நெடுங்கால காங்கிரஸ் ஆட்சியும் இதுபோல் Boredom, (எம்ஜிஆரின்) Stardom, மாறிய தலைமுறையின் (மொழிப்போர் போராட்டம்) வேகமான முடிவெடுத்தல், சோஷியல் மீடியாவிற்கு பதிலாக சினிமா, மேடைப்பேச்சு என்று இதெல்லாம் சேர்த்துக் கவிழ்ந்து திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தன.

ஆனால் சமீபத்திய மாற்றத்தின் எல்லாக்காரணிகளுக்கும் முதன்மைக் காரணியாக வெறும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களை சொல்லிக்கொண்டு, அதை மிகப்பெரும் ஆயுதமாக கருதுவது, ஆளும்/எதிர் இரண்டு கட்சிகளுக்குமே நல்லதல்ல.

புதிய அரசுதான், அது ஆட்சிமுறையை புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமம்தான். அதற்காக செய்வதையெல்லாம் வெறும் ரீல்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம், மீம்ஸ்களில் விளம்பரப்படுத்திக்கொண்டே இருப்பது, ஒவ்வாமை. அதிலும் பலது, ஏற்கனவே இருக்கும் நடைமுறை விஷயங்கள். கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரிவர பயன்படுத்த, அதிகாரிகளையும் அதிகாரத்தையும் கொஞ்சம் அவகாசமெடுத்து பயன்படுத்தினால், அதுவும் நேரடியாக நேர்மையாக பயன்படுத்தினாலே போதும்.

எதிர்க்கட்சி - "நீங்க ரீல்ஸ் ஆட்சி நடத்தாமல் ரியல் ஆட்சி நடத்தப்பாருங்கள்..!" என்று சட்டமன்றத்துக்குள் விமர்சித்துக்கொண்டே, வெளியே, "நாம தோற்க இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தான் காரணம்..இனி அத முழுசா சரியா பயன்படுத்தணும்..!" அப்போ ரீல்ஸ்ல எதிர்க்கட்சியாக செயல்படலாம் என்பது எவ்வளவு பெரிய முரண்?

இரண்டு தரப்பையும் விட்டுவிடுவோம், இழவெடுத்த மீடியாக்கள் எல்லாமே ரீல்ஸ்களில் பெரும்பாலானவற்றை திரித்து, புரளி கிளப்பி, மடைமாற்றி, தேவையே இல்லாத செய்திகளை திணித்து மக்களிடம் புகுத்துவது, "செய்தியறிதல்" என்ற விஷயத்தையே புளிப்படையச் செய்வது, எரிச்சல்.

இருதரப்பும் ரீல்ஸ்களின் வழி சேற்றை மாறி மாறி அடித்துக்கொள்ள ஆரம்பித்தாயிற்று. அந்தச் சேற்றில் மலத்தைக் கலந்து அடிக்க மீடியாக்களும் தயாராகி விட்டாயிற்று.

ஆட்சி செய்வது எப்படியென்று தெரியாமல் ஒருபக்கம் தடுமாற்றம்.
எதிர்க்கட்சியாய் இருப்பதெப்படி என்று தெரியாமல் ஒருபக்கம் தடுமாற்றம்.
பொறுப்பான ஊடகங்களாய் செயல்படுவதெப்படி என்று தெரியாமல் ஒருபக்கம் தடுமாற்றம்.

எல்லாமே தடுமாற்றம்.

இவர்களுக்கெல்லாம் போக்கிடம், வெறும் இன்ஸ்டாக்ராமும் ரீல்ஸ்களும் மட்டும்தான்.

மக்களே, நாம் இப்போதுதான் "எதற்கெடுத்தாலும் மண்டையாட்டும்" மந்தைக்கூட்டத்திலிருந்து வெளிவர உத்தேசித்து, நல்லதோ கெட்டதோ - மாற்றம் தேவையென யோசித்திருக்கிறோம். ஆனாலந்த மந்தைக் கலச்சாரத்தை இன்னும் வேகமாக முனைப்பாக ரீல்ஸ் வழியாகவே நம்முள் புகுத்த பெரும் முயற்சி தொடங்கியிருக்கிறது.

சிந்திப்போம். செயல்படுவோம். ஏனெனில்,

அரசாங்கம் ரீலோ ரியலோ,

மக்கள் ரியல்.❤️🔥
---------------------
குறிப்பு:
கிள்ளி-கில்லி
தித்த(ன்) - தத்தி(ன்)
நாணம்கொண்ட தலைவி - நாணமேயில்லா கிழவி.

கோர்வையா கீதுல்ல?😉

அதை விடுங்கள். இதை எழுதிக் கொண்டிருக்கும்போது, முதல்வர் அறையில் ரீல்ஸ் போட்டு சர்ச்சையாகி இருப்பதாக ஒரு நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது.

Fffffaahhh 😊
------------------------
Writer Charithraa's

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

துவாரகா பிரபாகரன் alias "மேதகுவின் மகள்", புத்தகத்துக்கான பக்கங்கள் சிலபல திருத்தங்களோடு முதல் பாகம் தயாராய் இருக்கிறது....
18/05/2026

துவாரகா பிரபாகரன் alias "மேதகுவின் மகள்", புத்தகத்துக்கான பக்கங்கள் சிலபல திருத்தங்களோடு முதல் பாகம் தயாராய் இருக்கிறது. பதினேழு அத்தியாயங்கள். இந்தக்கட்டுரையை சேர்த்தால், (May)18.

(புத்தகம் பெற விரும்புவோர் தொடர்புக்கு Whatsapp +91 7418580369)

வருடம் முழுக்க யாருமே சீந்தாத இந்த ஈழதுக்க நிகழ்வை இந்தவொரு (May 18) நாளில் மட்டுமே எழுதியெழுதித் தள்ளினால், பாரம் குறைந்து விடுமோ? அப்படித்தான் பெரும்பாலானோர் செய்கிறார்கள். பின் மறுநாள் வேறு செய்திகளுக்கு, நிகழ்வுகளுக்கு தாவியும் விடுகிறார்கள்.

எல்லோரும் அப்படி தாவுவதற்காகத்தான், ஜெயம் ரவியின் திடீர் அழுகைப் பேட்டி, ரஜினிகாந்தின் திடீர் விஜய் பற்றிய பேட்டி, அமைச்சர் ராஜ்மோகனின் மீதான குற்றச்சாட்டுப் பேட்டி என்று இவையெல்லாமே கட்டமைக்கப்படுகிறது என்பது கசப்பான நுண்ணரசியல். எந்த மீடியாவாவது இன்றைய தினத்தைப் பற்றி Focus செய்கிறதா பாருங்கள்?

இருக்காது.

என்னளவில், வெறும் கட்டுரைகளுக்காக, வெறும் துக்க அனுஷ்டிப்புக்காக, எழுதிக்கடப்பதல்ல, முள்ளிவாய்க்காலும் அது முத்தமிட்ட மரண ஓலங்களும்.

ஈழம் பற்றிய விடயங்கள் நம்முள் உறைந்திருக்க வேண்டியதற்கு இரண்டு காரணிகள் உண்டு.

ஒன்று, காலத்துக்கும் அவர்தம் வரலாறும் போராட்டமும் துயரமும் நமக்குள் கனன்று கொண்டேயிருக்க வேண்டும். குறைந்தபட்ச அரசியல் புரிதலுக்காகவாவது அது தேவையாயிருக்கிறது. மற்றொன்று, யார் நிஜத்தில் போராளிகள், யார் அதைவைத்து அரசியல் செய்வது, யார் உண்மையில் இன்னமும் ஈழக்கனவு காண்பது போன்ற மர்மமுடிச்சுகள் அறிந்துவைத்துக் கொள்வது.

மூன்றாவதாய் நாமறியா ஓர் பெரும் காரணி, பலர் பேச யோசிக்கும் விடயம்,

"உண்மையிலேயே புலிகள் தரப்பு 100% சதவிகிதம் நியாயமாய் நடந்து கொண்டதா.?

இவற்றுக்கெல்லாம் கேள்வியும் பதிலுமாய், அந்தக்களப் போராட்டத்தில் எதையோ தேடப்போய் அழகானதொரு காதலை கண்டுகொள்கிறான் ஒருவன். அந்தக்காதல் மூலமே அவனுக்கு எல்லாவற்றுக்கான விடையும் குழப்பத்தீர்வும் கிடைக்கிறது.

அதுதான் மேதகுவின் மகள்.

அவள்தான் துவாரகா பிரபாகரன்.

The Princess of Tamil Eelam ❤️
---------------------
ஒரு மாபெரும் போராட்டத்தின் சிகப்புச் சரித்திர விடயங்கள் நம்மோடு எப்போதும் உறைந்திருக்க, காலம் முழுதும் நம்மோடு இணைந்திருக்க, நான் வெறும்....

பதிவுபோட விரும்பவில்லை.
பதியவைக்க விரும்புகிறேன்.

சொல்லப்போனால்,
விரிவுபடுத்த விரும்புகிறேன்.

கதையாய்.
காதலாய்.

காதல் கதையாய்.
---------------------
குறிப்பு:
இந்தப்படம் Tamil Warriors-2.0ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிடைத்தவொன்று. Tag செய்ய முகநூலில் இருக்கிறார்களா தெரியவில்லை. இருப்பின் தொடர்பு கொள்ளவும்.
--------------------
Writer Charithraa's

(For the Author's Other books - Whatsapp +91 7418580369)

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

சில படங்கள் அப்படித்தான்.சொல்ல வருகிற விஷயமும் கருவும், முதல்பாதியில் அது சொல்லப்படுகிற விதமும்  புலிப்பாய்ச்சல் மாதிரி ...
17/05/2026

சில படங்கள் அப்படித்தான்.

சொல்ல வருகிற விஷயமும் கருவும், முதல்பாதியில் அது சொல்லப்படுகிற விதமும் புலிப்பாய்ச்சல் மாதிரி அவ்வளவு அற்புதமாக இருக்கும். "அட நல்லாருக்கே..!" என்று நாம் ஆசுவாசப்படுவதற்குள் இரண்டாம் பாதியில் விளையாட்டுத்தனமாய் எதையெதையோ நீட்டி முழக்கி, சொல்ல வருவதை சரியாக சொல்லத்தெரியாமல், "எப்படா வெளிய போவோம்..?" என்று நாய் மாதிரி நம்மை மூச்சு வாங்க வைக்கும்.

கருப்பும் அவ்வாறே.

"ஏழைகளுக்கான சட்டம்" என்று ஒரு திறமான மெசேஜ் இருக்கிறது. முதல்பாதியில் அது சொல்லப்பட்ட விதமும் படு அருமை. இரண்டாம் பாதியில், வேண்டாம் விடுங்கள்.

அந்த முதல்பாதியும் நம்மோடு ஒட்டுவதற்கு, கதையின் கரு புரிவதற்கு, படம் நகர்வதற்கு காரணம், மலையாள நடிகர் இந்திரன்ஸ்.

"யதார்த்தம்" என்ற சொல் எங்காவது படத்தில் ஒட்டியிருக்குமானால் அது அவர் மட்டுமே. அதுவும் அந்த நகை வாங்கின பிறகு காந்தி சிலைக்கு முன்பாக காட்டும் அந்த கையாலாகாத கோவம்.....சும்மாவொன்றும் தேசியவிருது கொடுக்கவில்லை அவருக்கு.

அதற்கு நேரெதிர், திரு(ச்சி கிழக்கு)ஷா.

நான் ஸ்டாப் டேக்கில் இன்னமும் பேசவே வராத, ரியாக்ஷனும் வராத சீனியர் நடிகை திரிஷாவின் (தமிழகத்தின் தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?) கேரக்டரை தானைத்தலைவி ஸ்வாசிகாவிற்கு கொடுத்திருக்கலாம். கோர்ட் சீனில், கண்கள் மிரள ரியாக்ஷனில் பட்டை கிளிப்பியிருப்பார். படத்தின் இரண்டாம் பாதி போல், அவரையும் வீணடித்து விட்டார்கள்.

படம் அதற்காக, பார்க்கவே முடியாது/கூடாது ரகமல்ல.

இந்திரன்ஸ் நடிப்பு,
சொல்லவந்த கருத்து,
சூர்யாவின் ஸ்க்ரீன் ப்ரசன்ஸ்,
விஜய்யின் ரெஃபரென்ஸ் காட்சிகள்.

இதெல்லாம் ரசிக்க வைக்கும்.

கருப்பில்,

(கதைக்)கரு - புலி மாதிரி, சிறப்பு.
ப்பு - அதன் கொட்டையை எடுத்தது மாதிரி, (தவி)ப்பு!
-----------------------
குறிப்பு :
"அப்போ படம் நல்லாருக்கு..RJ பாலாஜி நல்லா டைரக்ட் பண்ணிருக்காப்லன்னு சொல்றீங்களா...நம்ப முடிலயே...." என்று கேட்டால்,

சந்தானம் ஸ்டைலில் இப்படி பதில் சொல்வேன்-

"நானும் நம்பல தான்..ஆனா டைரக்ஷன் நல்லால்லன்னு சொன்னா அந்தாளு திரும்பவும் கிரிக்கெட் தமிழ் கமெண்ட்ரி போயிடுவாப்ள. அந்த கொடுமைய கேக்கறதுக்கு....இது...இப்ப..நம்புறீங்களா..?"

"ஹிஹிஹி..படம் நல்லா டைரக்ட் பண்ணிருக்காப்ல.!"
--------------------------------
Writer Charithraa's

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

ஒரு மனிதன் இவ்வளவு உடைந்து, அலுத்து, அழுது, புலம்பி, குழம்பி, வெடித்து....(துயரத்துக்கான வார்த்தைகள் வேறென்னென்ன உண்டோ ....
16/05/2026

ஒரு மனிதன் இவ்வளவு உடைந்து, அலுத்து, அழுது, புலம்பி, குழம்பி, வெடித்து....(துயரத்துக்கான வார்த்தைகள் வேறென்னென்ன உண்டோ ...அத்தனையும் இட்டு நிரப்பிக்கொள்ளுங்கள்) நான் பார்த்ததில்லை.

"இவன் நடிகன்டா..என்ன வேணாலும் பேசுவான்.." என்று கருதவே முடியாதபடி, நாம் என்னென்ன எதிர்க்கருத்து நினைப்போமோ அத்தனையும் அவரே சொல்லிவிட்டு உடைந்து அழுகிறார். அந்தக் கண்களில் பொய் இருப்பதாக, நடிப்பதாக நினைக்கவே முடியவில்லை.

முழு வீடியோவும் பார்க்க இயலாதபடிக்கு, நமக்கே கண்கள் கசிகிறது.

கை நரம்புகளை எல்லாம் அறுத்திருக்கிறார், மகன்களுக்காக.

விக்ரம், கார்த்தி, சூர்யா, ஐசரி வேலன், பிரபுதேவா எல்லோரும் பேட்டிகளில், "இவன் பொண்டாட்டிக்கு பயந்தவன்..அப்பாவி..கைல காசு கூட வெச்சுக்க மாட்டான்..!" என்று ஜாலியாக கலாய்த்தபோது பெரும்பாலான அப்பாவிக் கணவர்கள்,

"என் இனமடா நீ...!" என்று ஆறுதல் அடைந்திருப்பார்கள்.

இன்று அதே அப்பாவிக் கணவர்கள் இவரது கண்ணீரைப் பார்த்தால், "நாம பரவால்ல போலருக்கே..!" என்று கருதக்கூடும்.

அவ்வளவு வலி.

சிலந்திகள் (சில) பெண்கள்.
விழும் விட்டில்பூச்சி நாம்.

Gain Power, Jeyam Ravi ❤️
ஆணினமாய் நாங்கள்,
Definitely Stand With You ❤️
------------------------------
குறிப்பு:
கெனிஷா = 🩷🩷
-----------------------------
Writer Charithraa's

Follow me on my WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VazF5r40bIdvOmdnx30I

Address

ByePass Extension
Tiruchirappalli
621010

Alerts

Be the first to know and let us send you an email when Writer Charithraa's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Writer Charithraa's:

Share