Green Thirupathur

Green Thirupathur Green Revolution of NextGen

கர்நாடகாவின் பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள நந்தி மலை, ஒரு குறிப்பிடத்தக்க நீர்ப்பிடிப்புப் பகுதியாகும்.இது தென்னிந்தி...
25/06/2025

கர்நாடகாவின் பெங்களூருக்கு அருகில் அமைந்துள்ள நந்தி மலை, ஒரு குறிப்பிடத்தக்க நீர்ப்பிடிப்புப் பகுதியாகும்.

இது தென்னிந்தியாவில் உள்ள பல முக்கியமான ஆறுகளின் பிறப்பிடமாகும்.

பின்வரும் ஆறு ஆறுகள் நந்தி மலைகளிலிருந்து அல்லது அதற்கு அருகில் உருவாகின்றன:

1.அர்காவதி ஆறு காவிரி ஆற்றின் துணை நதி, இது பெங்களூரு கிராமப்புற மற்றும் ராமநகர மாவட்டங்கள் வழியாக பாய்கிறது.

2.சித்ராவதி ஆறு - பென்னா நதியின் துணை நதி, இது கர்நாடகா மற்றும் ஆந்திராவின் சில பகுதிகள் வழியாக பாய்கிறது.

3.பாபக்னி ஆறு ஆந்திரப் பிரதேசம் வழியாகப் பாயும் ஒரு வற்றாத நதி; பென்னாவின் துணை நதியும் கூட.

4.உத்தர பினாகினி (வடக்கு பென்னா) -ஆந்திரப் பிரதேசத்தில் வடக்கு நோக்கி பாய்ந்து, பென்னா நதியுடன் இணைகிறது.

5.தட்சிண பினாகினி (தெற்கு பென்னா அல்லது பொன்னையார்) கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக வங்காள விரிகுடாவில் பாய்கிறது.

6.பாலாறு ஆறு நந்தி மலைகளுக்கு அருகில் உருவாகி கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வழியாக பாய்கிறது.

நன்றி : Forest Sivakumar G

வேப்பமரம் பற்றிய ஒரு தகவல்
14/06/2025

வேப்பமரம் பற்றிய ஒரு தகவல்

உலக பூமி தினம், 22 ஏப்ரல் 2025  முக்கியத்துவமும் & வரலாறும். உலக பூமி தினம் (WED) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் த...
22/04/2025

உலக பூமி தினம், 22 ஏப்ரல் 2025 முக்கியத்துவமும் & வரலாறும்.


உலக பூமி தினம் (WED) என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22 ஆம் தேதி கொண்டாடப்படும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும் , இது கடந்த 53 ஆண்டுகளாக பல்வேறு கொள்கை வகுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளின் முந்தைய இலக்குகளின் சாதனைகளை கௌரவிக்கும். பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பையும் மனிதகுலத்துடனான அதன் உறவையும் பாதுகாக்க பல விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.

இந்த நாளில், உலகெங்கிலும் உள்ள அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ஒன்றிணைந்து இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் .

இன்று. வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவமனை எம் டி செந்தில்குமார் அவர்களின் முன்னிலையில் அரசு மருத்துவர் எலும்பு முறிவு பிரிவு டேவிட் மற்றும் பொது மருத்துவர் முன்னிலையில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை நண்பர்களுடன் இணைந்து மரக்கன்று நடவு செய்யப்பட்டது.

பிறகு பூமி தினத்தில் அரசு மருத்துவர் தே. செந்தில்குமார் அவர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஆளுக்கு ஒரு மரம் நடவு செய்தால் வருகின்ற பருவ நிலை மாற்றத்தை நாம் எளிதாக கடக்க முடியும் இல்லையெனில் மாபெரும் இயற்கை இடர்பாடுகளில் சிக்க வேண்டி இருக்கும் என கூறினார்.

பசுமை பூங்கா  தற்போது வெறிச்சோடிய பூங்காவாக மாறியது..மாண்புமிகு தமிழக முதல்வர்.திராவிட மாடலின் தந்தை .மு.க ஸ்டாலின் ஐயா ...
09/04/2025

பசுமை பூங்கா தற்போது வெறிச்சோடிய பூங்காவாக மாறியது..

மாண்புமிகு தமிழக முதல்வர்.திராவிட மாடலின் தந்தை .மு.க ஸ்டாலின் ஐயா அவர்கள் தமிழகத்தை பசுமை நாடாக மாற்ற வருங்காலங்களில்
உறுதி ஏற்போம் என்று சட்டமன்ற கூட்டத் தொடரில் பேசிவரும் சூழலிலும் அதனை ஏற்று
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று அணைத்து பொது கூட்டங்களில் பேசிவரும் சூழலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை 4வது வார்டு பாபு நகர் பசுமை பூங்காவில் விலை உயர்ந்த மரங்கள்.பால்வகைமரங்கள். 1. குமிழ் தேக்கு.
2. நீர்மருது
3. புரசை மரம்
4. பழசு மரம்
5. தேக்கு மரம்
6. வேப்பமரம்
7. வாகை மரங்கள்
என மிகவும் அரிதாக கிடைக்கக்கூடிய மரங்களை மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதி இல்லாமலும் பசுமை கமிட்டி ஒப்புதல் பெறாமல் மரங்களை வெட்டி வருவது எங்களை போன்றோருக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது போன்ற செயல்கள் நமது திருப்பத்தூர் மாவட்டத்தை வெயிலின் பிடியில் எடுத்துச் செல்வதற்கான வழிவகைகளை ஊக்குவிக்கிறது.

இதுபோன்ற செயல்களை செய்யும் இயற்கை சமூகவிரோதியை தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலராக கோரிக்கை விடப்படுகிறது...

சுகாதார வனம் சீரமைக்கும் பணி நேற்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளையின் சார்பில்  புதூர் பகுதியில...
10/03/2025

சுகாதார வனம் சீரமைக்கும் பணி

நேற்று ஞாயிற்றுக்கிழமை டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளையின் சார்பில் புதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்கு செந்தமான இடத்தில் உருவாக்கப்பட்ட
சுகாதார வனம் பராமரிப்பு பணியில்.

வேளாண் ஆராய்ச்சியாளர்கள் வாணியம்பாடி பாலாற்றில் ஆய்வு.டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் கடந்த மூன்று ஆண்டு...
28/01/2025

வேளாண் ஆராய்ச்சியாளர்கள் வாணியம்பாடி பாலாற்றில் ஆய்வு.

டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேட்டெய்ல்என்னும் தாவரம் பற்றி மாவட்ட ஆட்சியரிடம் எடுத்துரைக்கப்பட்டத்து இன்று மாவட்ட வேளாண் துறை JD அவர்களும்.தணியார் வேளாண் ஆராய்ச்சியாளர் மகாராஜ் அவர்களும் வாணியம்பாடிக்கு வருகை புரிந்து கேட்டெய்ல் என்னும் தண்ணீர் உறிஞ்சி தாவரம் பரவியுள்ளதை பார்வையிட்டனர்.

பின்பு அதற்கான கோப்புகள் தயாரித்து மாவட்ட ஆட்சியரிடம் தருவதாகவும் மற்றும் கேட்டெய்ல் தாவரம் அழிக்க துரித நடவடிக்கையை சென்னையில் உள்ள வேளாண் ஆராய்ச்சிக்கும் வேளாண் பள்ளி ஆராய்ச்சி மாணவர்களுக்கும் அனுப்பட்டு கல ஆய்வு மேற்கொண்டு விரைவில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.......

*பசுமையுடன் மஞ்சள்பை விழிப்புணர்வு*.ஜன.10 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி பகுதியில் உள்ள ...
10/01/2025

*பசுமையுடன் மஞ்சள்பை விழிப்புணர்வு*.

ஜன.10 திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு ஊராட்சி பகுதியில் உள்ள லாலா ஏரி பகுதியில் மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் தொல்காப்பியன் . வாணியம்பாடி காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார். முன்னிலையில் மியாவாக்கி எனப்படும் அடர் வனம் உருவாக்க முதற்கட்டமாக
*(10அடிக்கு மேல் உள்ள மரங்கள்) 200 மரங்கள்* நடவு செய்து *பசுமை பொங்கல்* கொண்டாடப்பட்டது. மற்றும் அறக்கட்டளை தலைவர் சேதுராமன் நெகிழி (பிளாஸ்டிக்) ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி மூலம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களுக்கு எடுத்துரைத்து ஆளுக்கொரு பசுமை மஞ்சப்பையை உமேஷ் அவர்கள் கொடுத்து தொடங்கி வைத்தார் பிறகு விழா ஒருங்கிணைப்பாளர சுரேஷ் மற்றும் பசுமை குழுவினர்கள் லாலாஏரி பகுதியில் உள்ள அணைத்து வீடுகளுக்கும் வீட்டிற்கு ஒரு பசுமை பையை கொடுத்தார்கள்.
இறுதியில் வருகை புரிந்த அனைவருக்கும் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சக்தி மற்றும் அசோக் தேநீர் விருந்து அளித்து நன்றி தெரிவித்தார்கள்....

இதில் சிறப்பு அழைப்பார்கள்.
1. மாவட்ட மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர். திரு. தொல்காப்பியன்.
2. திரு.விஜயகுமார் Dsp.
3. தலைவர் JCI . திரு.அன்பரசன்.
4. திரு.தே.பிரபாகரன்.
மற்றும் அறக்கட்டளை சட்ட ஆலோசகர்
ஏசி.தேவகுமார்.மற்றும் லாலா ஏரி.பத்தாப்பேட்டை. கேனாமேடு.
மேட்டுபாளையம் . கச்சேரி சாலை. கனவாய் புதூர்.புல்லாக்குட்டை பசுமை நண்பர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்...

*காலநிலை மாற்றத்தை குறைக்க ஒவ்வொருவரும் அவர்களின் பிறந்த நாளில் ஒரு மரக்கன்று நடவு செய்தாக வேண்டிய காலகட்டாயம்.* டாக்டர்...
03/01/2025

*காலநிலை மாற்றத்தை குறைக்க ஒவ்வொருவரும் அவர்களின் பிறந்த நாளில் ஒரு மரக்கன்று நடவு செய்தாக வேண்டிய காலகட்டாயம்.*

டாக்டர் ஏபிஜே பசுமைப் புரட்சி அறக்கட்டளையின் நண்பர் திரு எஸ் வி எஸ் செந்தில்குமார் அவர்களுக்கு டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளையின் சார்பில் பசுமை பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாணியம்பாடி நகராட்சி கோணாமேடு அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நடும் விழா*திருப்பத்தூர் மாவட்...
27/09/2024

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வாணியம்பாடி நகராட்சி கோணாமேடு அரசு பள்ளியில் மரக்கன்றுகளை நடும் விழா*

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு நகராட்சி உயர்நிலைபள்ளியில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் முன்னிலையில் , நகர திமுக செயளாலர் சாரதிகுமார் மரக்கன்றுகள் நடவு செய்து தொடங்கி வைத்தார் பின்னர் நகரஉறுப்பினர் பிரகாசம் வழிநடத்த, தலைமை ஆசிரியர்கள் சுகுணா.வேல்விழி உறுதிமொழி ஏற்க சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை பசுமை நண்பர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர்.மற்றும் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுடன் இணைந்து ஆளுக்கொரு மரக்கன்றுகள் நடவு செய்தனர்... சிறப்பு மரக்கன்றுகளாக வேங்கை.அத்தி. ஜம்புநாவல்.கஸ்கஸா.தாண்ட்ரிக்காய். மகோகனி. வேப்பன் .புங்கன். நடவு செய்யப்பட்டது....

வாணியம்பாடி  நியூட்டவுன்  DVG நகரில் அமைந்துள்ள பூங்காவில் இன்று இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் கலாம் காமராஜ் அறக்கட்ட...
06/09/2024

வாணியம்பாடி நியூட்டவுன் DVG நகரில் அமைந்துள்ள பூங்காவில் இன்று இந்திய செஞ்சிலுவை சங்கம் மற்றும் கலாம் காமராஜ் அறக்கட்டளை சார்பாக 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது,

வாணியம்பாடி நகராட்சி பூங்காங்களை பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்நிகழ்வில் ஆல், அரசு, வேம்பு, அத்தி, மந்தாரை, புங்கன், நாவல், பாதாம், , வேங்கை . நீர் மருது. தாண்ட்ரிக்காய்மரம் உட்பட நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.

*திமுக நகர செயலாளர் திரு.சாரதிகுமார்பிஇ.* மற்றும் *இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் மாவட்ட துணைச் சேர்மன் சத்தியமூர்த்தி* தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செஞ்சிலுவை சங்க மாநில உறுப்பினர் முருகன், மாவட்ட பொருளாளர் பாண்டியன், *முத்தமிழ் மன்ற செயலாளர் பிரகாசம்*, நகர்மன்ற உறுப்பினர் கலைச்செல்வன், தென்னரசு,
Dr APJ Green revolution Trust சேதுராமன் .
*கலாம் காமராஜ் அறக்கட்டளை தலைவர் விஜய்ஆனந்த்,* வேர்கள் அறக்கட்டளை வடிவேல் சுப்ரமணியன், , குடியிருப்போர் நலசங்க உறுப்பினர்கள், இந்திய செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள்பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள்.மற்றும் *பொறியாளர் . ஹரீஷ்* உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடவு செய்தனர் .

Address

Vs Vishvanathan Street. Periyapet
Vaniyambadi
635751

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919092548310

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Thirupathur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Thirupathur:

Share

Category